சுற்றுலா பேருந்தில் தீப்பரவல்..!

அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில்

8 பேர் உடல் கருகி உயிரிழந்ததோடு மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும்,

ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. எனினும், தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சும்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *