மழையினால் பாதிப்புக்குள்ளான மக்கள்…!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை,

மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,

வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சீரற்ற காலநிலையுடன் கூடிய பலத்த காற்றினால் மரம் முறிந்து விழல் மற்றும் மண்மேடு சரிதல் உள்ளிட்ட விபத்துக்களினால் இதுவரை 12207 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,

இதுவரை (நேற்று மாலை ) 08 பேர் உயிரிழந்துள்ளதுடன்,13 பேர் காயமடைந்துள்ளனர்.12 வீடுகள் முழுமையாகவும்,3166 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *