மன்னார் மண்ணிலிருந்து கலக்கும் துடுப்பெடுத்தாட்ட  வீராங்கனை சயந்தினி.

23 வயது பெண்களுக்கான தேசிய சுப்பர் லீக் ( National Super League) போட்டிகளில் மன்னார் மண்ணின் வீராங்கனை சயந்தினி முதற்தடவையாக அறிமுகமாகி பங்குபற்றியிருந்தார்.

இந்த கடினப்பந்துப்போட்டியில் கொழும்பு அணியின் ஆரம்ப பந்துவீச்சாளராக களமிறங்கி மிகவும் சாதுரியமாக பந்து வீசியிருந்தார்.

இந்தப்போட்டியில்  2 ஓவர்கள் பந்து வீசிய சயந்தினி  10 ஓட்டங்களை மட்டுமே  எதிரணிக்கு வழங்கியிருந்தார்.

சிறப்பான பந்துவீச்சுடன் கலக்கிய ஆரம்ப பந்துவீச்சாளர் சயந்தினியின் பக்கம் கிரிக்கெட் அவதானிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *