வல்வெட்டித்துறையில் நடந்த துயரம்..!

மன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவமானது வல்வெட்டித்துறை ஶ்ரீ முருகன் குடியேற்ற பகுதியில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

26 வயதான யுவதி ஒருவர் தன் காதலில் ஏற்பட்ட பிரிவின் காரணமாக மன அழுத்ததிற்கு உட்பட்டு நேற்று இரவு தீக்குளித்துள்ளார்.

குறித்த பெண் இந்த விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கிராம உத்தியோகஸ்தர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து ,பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *