வனிது ஹசரங்க தலைமையில் இலங்கை அணி|மேலதிக வீரராக வியாஸ் உள்ளடக்கம்

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கும் என , இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

வனிது ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த வருட அணியில் அணியின் மேலதிக வீரரர்களில் ஒருவராக வியாஸ்காந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் சன்ரைசர்ஸ் அணியில் இணைக்கப்பட்டு விளையாடிய வியாஸ்காந்த், வீசிய நான்கு ஓவர்களும் சிறப்பாக வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அத்தோடு இவர்கள் மே மாதம் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *