உணர்வுகளற்ற ஓர் இதயம்!

மஞ்சள் கயிற்றில் துவங்கியது!
மஞ்சத்தில் கயிறாகித் துவண்டது!
குற்றச் சுமையை ஏந்திய
வெற்றுப் பதராய் வாழ்வது!
சிந்தனைக்கு ஒவ்வாத மடமாய்
நிந்தனைக்கு ஓயாத இடமாய்


அவளுக்கு சுவாசமே பகையாய்
அவனிக்கும் அவனுக்கும் பொருளாய்
உயிரிரிருந்தும் இல்லாத உடலாய்
உணர்வுகளற்ற ஓர் இதயம்!

எழுதுவது

கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *