உணர்வுகளற்ற ஓர் இதயம்!
மஞ்சள் கயிற்றில் துவங்கியது!
மஞ்சத்தில் கயிறாகித் துவண்டது!
குற்றச் சுமையை ஏந்திய
வெற்றுப் பதராய் வாழ்வது!
சிந்தனைக்கு ஒவ்வாத மடமாய்
நிந்தனைக்கு ஓயாத இடமாய்
![](https://vetrinadai.com/wp-content/uploads/2024/06/main-qimg-b628111678be75357eaad8b6c297afa5-lq358710766661798393-272x300.jpeg)
அவளுக்கு சுவாசமே பகையாய்
அவனிக்கும் அவனுக்கும் பொருளாய்
உயிரிரிருந்தும் இல்லாத உடலாய்
உணர்வுகளற்ற ஓர் இதயம்!
எழுதுவது
கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.