வாருங்கள் கண்மணிகளே

நம் திறமைகளை
மறைத்து எவ்வளவு காலம் தான்
வாழ்க்கை என்ற வட்டத்திற்குள்
மறைந்து வாழப் போகிறோம்
இப்படி வாழத் தானா பிறந்தோம் நாம்!

கேலிப் பேசிடும்
வீணர்களைக் கண்டு
பயப்படாமல்,

பயத்திற்கு வெளியே கொஞ்சம் பார்த்தாலே
நம் வாழ்க்கையில் சந்திக்க வேண்டியவை
இன்னும் எத்தனை என்பது
தெளிவாய் நமக்கு புரியும்!

நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பது வாழ்க்கை அல்ல
அதையும் தாண்டி
உலகில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது!

அச்சம் என்ற கூட்டை விட்டு வெளியே வந்து சாதனை படைப்பது தான்
சிறந்த வாழ்க்கை !

சாதித்த நம்மைப் போன்ற பெண்கள்
சோதனைகளைச்
சாதனையாக
மாற்றியவர்கள் தான்!

சிந்தித்து பார்த்தால்
நம்மாலும் முடியும்
எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பது நன்கு விளங்கும்!

சோதனைகளை கண்டு துவண்டு போக
நாம் பெண்களாக
பிறக்கவில்லை!

வட்டத்திற்குள் சிக்கி
கொண்டு வாழ்வதற்கு
பிறக்கவில்லை நாம்
சாதிக்க பிறந்தவர்கள்!

சோதனைகளையே சாதனையாக
மாற்ற பிறந்தவர்கள்
நாம் என்பதை
மறந்து விடலாகாது!

அடிமேல் அடி
எடுத்து வைத்து தைரியமாக
தன்னம்பிக்கையுடன்
துணிச்சலுடன்
தயக்கமின்றி
போராடினால்
சாதனையும்
ஒரு நாள்
நமது தோள் மீது அமர்ந்து இருக்கும்!

பிறகென்ன
நாம் ஒவ்வொருவரும்
சாதனைப் பட்டியலில்
இருப்போம்
என்பதை
நினைத்து நல்விடியலுக்காக
போராடுவோம்!

சாதனைகள் படைத்திடுவோம்
பெருமிதம் அடைவோம்
சரித்திரம் படைப்போம்
வெற்றி பெறுவோம்
வாருங்கள்
எதிர்கால
கண்மணிகளே!

எழுதுவது :விஜயலட்சுமி