நேற்று………


காற்று போல இருப்பாயா…..

சுவாசக்காற்றாய் இருப்பேன் என்றான்…..

என்னை புரிந்துகொள்வாயா….

உன்னைவிட அதிகமாய்

நான் புரிந்து கொள்வேன்
உன்னை என்றான்…..

வாழ்க்கை முழுதும்
உடன் வருவாயா….
அடுத்த ஜென்ம மும் உன்னைத் தேடி வருவேன் என்றான்…..

உன் மனதில் என்னை சுமப்பாயா….

என் உயிரில் உன்னை சுமப்பேன் என்றான்…..
நீ என் உயிர்
நீ என் ஆன்மா
நீ என் வாழ்க்கை
நீ என் எல்லாம்….. சொன்னவன்

சிலவருடங்களுக்குப்பின்……..

பெருந்தொல்லைநீ என்று காணாமல் போனான் கண் வெளியில் இருந்து…..

எழுதுவது ; தர்ஷிணிமாயா..