இயற்கை எம் அதிபதி

இயற்கை இயற்கை உன் அழிவை தடுப்போம்
இயற்கை இயற்கை உன் வளர்ப்பை கையில் எடுப்போம்
இயற்கையே பஞ்சபூதத்தின் அதிபதியே
உன்னை விட்டு பிரிந்தோம்
துன்பம் வந்து அடைந்தோம்
சுற்றுச் சூழலைக் காப்போம்
இயற்கையை நேசிப்போம்
கண்களுக்கு பரவசம் தந்து கரு மேகங்களால்
மழையை பொழிய வைத்த இயற்கையே
உன்னை வணங்குகிறேன் தலைவணங்கி போற்றுகிறேன்
கதிரவன் ஒளி இயற்கையில் விழி
தாகத்தில்நீர் வேண்டும்
பூமியில் அழகுக்கு இயற்கை வேண்டும்
நெருப்பை அணைத்தால் ஒளி மறையும்
இயற்கையை அழித்தால் பார் அழியும்
இயற்கையால் வானவில் தோன்றும்
அதை பார்ப்பவர்கள் கண் குளிரும்
இயற்கையை காப்போம் இயற்கை வளத்தை அதிகரிப்போம்
இயற்கையால் வானவில் தோன்றும்
அதை பார்ப்பவர்கள் கண் குளிரும்
நோயில்லாமல் வாழ்வோம்
அதற்கு இயற்கை வளத்தை அதிகரிப்போம்
மனிதனும் இயற்கையும் இணைந்தால்
வாழ்வு நலமோ நலம் என்று உணர்வான்

எழுதுவது : வ.சபிதா