கடலாமை

நிதான துடிப்பில்
உயிர் வாழும் ஆமையே!
பொருமையின்
சொரூபமே!

கால்களை
துடுப்பாய்
மணல்களை துளைத்து முன்னேறுவது
உனக்கே உரிதான சிறப்பே!

கவசமணிந்த
அதிசய அமைப்பே!
கடல் ராணியின்
செல்லப் பிறப்பே!
சமுத்திர சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியே!

நீரிலும்
நிலத்திலும்
வாழ்ந்திட பெற்றது
நீ செய்த புண்ணியமே
இறை படைப்பின்
அற்புதமே!

மணல் மேட்டில்
குழிப் பறித்து
முட்டைகள் இட்டு இனம் பரப்பிடும்
ஆமை இனமே
உரு அமைப்பின்
பேரழகே!
அழியா வரம்
பெற்று வாழியவே!

எழுதுவது : சி.ம.அபிமாலா
மலேசியா