மனசுக்குள் ஆயிரம்

மகத்துவம் நிறைந்த
மனித வாழ்வில்
மனதுக்குள் உருவாகும்
மகிழ்ச்சிகள் ஒரு புறம்
மனக்குழப்பங்கள் மறுபுறம்
மண்டியிட்டுக் கிடக்கின்ற
மந்தமான சூழலில்
மதங்களைக் கடந்து
மதியினை வளர்த்து
மனித நேயமென்னும்
மாபெரும் ஆயுதத்தை
மக்களெல்லாம் கைகளில் கொண்டு
வறுமையென்னும் அரக்கனை அழித்து
சிறுமையில்லா அறத்தினை வளர்த்து
பெருமைகொள் தமிழரென்னும்
தடத்தினை பதித்திட்டு
தமிழர் திருநாளை
தரணியெல்லாம் கொண்டாடுவோம்.


எழுதுவது

திருமதி. சா.தனலட்சுமி கோவிந்தராசு
செயமங்கலம்
பெரியகுளம்
தேனி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *