மனதில் உறுதிகொள்|கவிநடை
நெஞ்சமது உறுதிகொள்ள நிமிர்ந்த நன்னடை பழகு…!
கடக்கும் தொலைவு கடினம் பாதங்களில் வலிமைகொள்…!
காண்பதில் எல்லாம் மனதை அலைக்காதே கடிவாளம் அதனை கைகொள்…!
யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் உறுகொள்…!
வீணர்கள் பேச்சு வீதிகள்தோறும் காதில் விழாது மூடிக்கொள்…!
இளமையில் வறுமையை வெற்றிகொள்…!
ஏற்றம் தரும் வாழ்வில் பெருமை கொள்…!
திரும்பும் திசைகள் தோறும் திருப்பங்கள்
பாதை தேர்வு இதில்
பகுத்தறிவுகொள்…!
கற்ற கல்வியினால் உற்ற பயன்கொள் உறுதியாய் ஊர் மெச்ச வாழ்ந்து கொள்…!
முன்னேற்றமே வாழ்வின் முடிவென முயற்சியை
என்றும் விடாதே கொள்…!
எழுதுவது:திருமதி பெ.மாலையம்மாள்@ ராசாத்தி
ஸ்ரீ வில்லிபுத்தூர்