கட்சிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு|வென்று தலைமையை தக்கவைத்த பொறிஸ் ஜோன்சன்

கொன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியைப்பதிவு செய்த பொறிஸ்ஜோன்சன் கட்சியின் தலைமைப்பொறுப்பைத் தக்கவைத்துக் கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 211 வாக்குகளும் 148 வாக்குகள் எதிராகவும் பதிவாகியது.

இதன்படி கட்சிக்குள் வரும் 12 மாதங்களுக்கு இனி மேற்கொண்டு நம்பிக்கையில்லாபிரேரணையை கொண்டுவரமுடியாது எனவும் குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தனிப்பட்ட கூட்டத்தில் தான் மீண்டும் வென்று வருவேன் என்று குறிப்பிட்டிருந்தார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

நாட்டின் எதிர்க்கட்சிகள் பிரிட்டிஷ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கொன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டும் வருகின்றனர்.

அதேவேளை மீண்டும் ஒரு தேர்தலை உடனடியாக எதிர்பார்க்க முடியாது எனவும் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *