விரோதக் கும்பல்களால் அழியும் அமேசன் காடுகள்|கேட்க யாருமற்ற நிலை
நாட்டில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைகளால், அமேசன் காடுகளை இழந்துகொண்டிருக்கும் நாடாக தென்னமெரிக்க நாடான பெரு இருந்து வருகிறது.
அமேசன் காடுகளை பொறுத்தமட்டில் பெருவில் சுமார் 7 கோடி ஹெக்டேயர் காட்டுப்பகுதியாக சூழ இருக்கின்றன.
அங்கு நிலவும் மோசமான அரசியல் சூழலால் காடுகள் அழிக்கப்படுவது கேட்பாரற்று இருப்பதாகச்சொல்லப்படுகிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் 4 அரசியல் தலைவர்கள் தலைமைப்பொறுப்பிலிருந்து மாறிவிட்டனர்.
இந்த அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சமூகவிரோதக்கும்பல்கள் அமேசான் காடுகளை அழிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகச்சொல்லப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 1.7 லட்சம் ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தென்னமெரிக்க நாடான பெரு நாட்டுக்கு அழிவு மாத்திரமல்ல, உலக காலநிலை மாற்ற சவால்களுக்கு மிகப்பெரும் காரணமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.