நட்சத்திரங்கள்

அந்தி சாய்கையில்
வீட்டு வாசலில்
நீர்தெளித்து
புள்ளி வைத்து
கோலம் போட்டப்
பெண்ணை
பார்த்தது
இரவு ….

தானும் அப்படி
செய்ய முனைந்து,
பூமியில்
மழைநீர்தெளித்து
வானிலே
புள்ளி வைத்துவிட்டு
கோலம்
போடத்தெரியாது
விழித்துநின்றது
நீண்ட
அந்த இரவு….

எழுதுவது: தர்ஷிணிமாயா