ஆதலால் காதல் செய்வோம்

புதிய பண்பாட்டின்
பழைய நம்பிக்கை
வாழ்வியல் கணக்கில்
வரலாற்றுச் சான்று

மரபுகள் மீறாத
மானிட தர்மம்
மர்மங்கள் சொல்லும்
மங்கள நாதங்கள்

ஆண் பெண்ணிண்
அகிம்சை ஒப்பந்தம்
ஏழுலகத்தை கடந்த
எதார்த்த எதிர்ப்பார்ப்பு

வள்ளுவன் வாசுகி
வழிவந்த வைபவம்
வார்த்தை இனிமையின்
வாசனை திரவங்கள்

நெஞ்சுரம் கொண்ட
நேர்வழி நிர்வாகம்
நல்லவர்களுக்கான
நாள் வகை வேதங்கள்

காதல் அது
கடவுளில் பாதி
ஆதலால் காதல் செய்வோம் வாரீர்….

எழுதுவது : ராதை சுப்பையா