தலைப்பூ….🌹

விக்கல் வந்தால்
தண்ணீர் பருகு
சிக்க லென்றால்
தைரியம் பருகு…

சிந்தனை விளக்கில்
எண்ணெய் ஊற்று
முயற்சி திரியால்
உன்னை ஏற்று…

கானம் பாடி
பறக்கும் பறவை
சோர் வான தென்று
முடக்காதாம் சிறகை…

ஊனம் என்பது
உறுப்பினில் இல்லை
முடியா தென்ற
சலிப்பினில் உண்டாம்…

திட்ட மென்பதை
திடமென் றாக்கி
கட்டம் கட்டி
காய்களை நகர்த்து…

மட்டம் தட்டும்
மனிதருக் கிடையில்
விட்டம் தொட்டு
உன்னை உயர்த்து…!!!


எழுதுவது : வெண்பா.பாக்யா