என்னவென்று சொல்ல

என்னானு நாஞ்சொல்ல

என்னவென்று சொல்ல
உன் முகம் பார்க்கயில்
என் முகம் மலர்வதை
என்னவென்று சொல்ல…..

நீ சிரிக்கும் சிரிப்பை நான் சிந்தாமல் சேகரிப்பதை
என்ன வென்று சொல்ல…..

நீ உதிர்க்கும் வார்த்தைகளை
என் மனபெட்டகத்தில்
பூட்டி வைப்பதை
என்னவென்று சொல்ல…….

என் மன வானில்
உன் நினைவுகளே
நட்சிதிரமாய் ஜொலிப்பதை
என்ன வென்று சொல்ல….

என் காதலை உன்னிடம் சொல்ல
தயங்கிய நாட்களை
தேன் தடவிய நாட்களாக
நினைக்க
நேரும் நேரத்தில்….

உன் மணவோலை
என் கையில் இருப்பதை ……
என்ன வென்று சொல்ல…….

என் காதல் மலரும் முன்னே
கருகி சருகானதேன்….
அதை நீ

என்னவென்று சொல்வாயா….
என்னுயிரே

எழுதுவது : திருமதி சஷி ராஜா