இயற்கை எழில்

காணும் பொழுதில்
கண்ணைக் கவரும்
ஏழு வண்ண ஜாலம்
கவிஞனையும்
கவிபாட வைக்கும்
கடவுளின் வண்ணமலர் ஜாலம்

காற்றில் ஒளி பட்டு
திவலை துளி துளைத்து
முப்பட்டகமாக செயல்பட்டு
ஒளியை
அடையச் செய்கிறது
வானவில்
மாரி ஜாலம்

கிரேக்க நகரில்
சொர்க்கம் நரகம்
பூமிக்கு இடையே
பாலமான ஜாலம்
செர்பியா நாட்டில்
மழைக் கடவுளாய்
வில்லாய் கருதப்பட்டது
கற்பனை ஜாலம்

ஹவாய் தீவிலே
அதிகம் தோன்றி
பிரமிக்க வைக்கும்
வானவில் ஜாலம்
நமக்கு அளித்த
இயற்கை பரிசு
இரட்டை வானவில்
இரு வண்ண கோலம்

ஆகாச வானில்
அழகழகாய்
ஆண்டவன்
அருளிய
பரிமானங்கள்
மாரி பொழியும்
வானவில்லின் ஏழு வண்ண
ஜாலங்கள்
அபாரமானது இதமானது

சி.ம.அபிமாலா
மலேசியா