மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும்….
பழையபடி யதார்த்தமாய்

எந்த வழி வந்து
தொற்றிய தென்று
தெரியவில்லை…

இந்த வலி தந்து
வற்ற செய்வதேனோ
புரியவில்லை…

யதார்த்தம் என்ற
கட்டினை அவிழ்த்து
உச்சத்தில் அமர்ந்த
உண்மை கதை தனை
நான் அறியேன்…

சாயமே பூசாத
ஏக்கம் தந்து
மாயங்கள் பூசிய
மனதாக்கினாய்…

காயங்கள்
எப்படி
எனக்குள் தைத்தாய்…

சத்தங்கள் இல்லாமல்
யுத்தம் செய்யும்
ஆரவாரங்களை
அலசி பார்த்தால்…

அன்பு கூட
அனலாக
கொதிக்கிறது…

சங்கீதமாய் உம் நினைவோ
நச்சு போல கொல்லுகிறதே….

தாங்காது இனி மேலும்
எந்தன் போக்கு…

நீங்காது இம்சிக்கும்
இந்த நாட்கள்…

தூங்காது எனை வாட்டி
வதைக்காமல்
மாற்றம் வேண்டும்
பழையபடி யதார்த்தமாய்…!!!

எழுதுவது : வெண்பா பாக்யா