குடும்பம் ஒரு கோயில்

பிஞ்சு மனமாம் பிள்ளை வளர்ப்பில்
நஞ்சு கலவா நல்ல நெறியை
நாளும் விதைத்தால் நன்மை மலருமே


ஆளும் வளர அறிவும் வளருமே!
அன்னை தந்தை அன்பில் ஒன்றிட
கன்னல் மொழியில் கனிவாய்ப் பேசிட
பிள்ளை குணமும் பெரிதும் மாறுமே


கொள்ளை இன்பம் குடியில் சூழுமே!
வள்ளுவன் ஈந்த வாழ்க்கை நெறியை
உள்ளம் மகிழ ஓம்பி வாழ்ந்தால்
குடும்ப வாழ்வும் கோயிலாகுமே
கொடுக்கும் தெய்வம் குடியில் வாழுமே!

எழுதுவது :சி.விஜயலட்சுமி கோவிந்
மலேசியா