உன்னால் முடியும்

கை வண்ணம் காட்ட இயலாவிட்டாலும்,
கால் வண்ணம் காட்டலாமே..


உடல் தானே ஊனம்,
உயிர் உள்ளதே
உன்னால் முடியும், முயன்று பார்….

மாற்றுத்திறனாளி எனின்,
மாறிய புதிய திறன் கொண்டவரே,
புதிய சரித்திரம் படைக்க வந்தவரே,
உன்னால் முடியாதது எது உள்ளது… முயன்று பார்…

சிலர் ஊனமற்று இருந்தும்,
மானமற்று வாழ்கின்றனர்…

இவர்களின் மத்தியில்
மாற்றம் செய்ய, ஏற்றம் செய்ய
உலகத்தில் உள்ளோரின்
உள்ளம் கவர,
முயன்று வாரீர்….

உன்னால் முடியும்,
உன்னால் மட்டுமே முடியும்……

எழுதுவது : த.திவ்ய லட்சுமி
திருப்பத்தூர்