அழகன் முருகனுக்கு அரகரோகரா

அரகரோகரா சொல்லுங்க அரகரோகரா
அழகான வாழ்வு தந்த
செந்தில் நாதனுக்கு சொல்லுங்க அரகரோகரா…

அழகன் என்று தமிழ் மொழிச் சொல்லும் முருகனுக்கு …

காவடி சிந்து தந்த கந்தனுக்கு….

சக்தி வேலவனாய்
வந்து
தீராத வினைகளைத் தீர்த்த
நம் குமரனுக்கு …

வேதங்கள் நான்கும் வென்றெடுத்த வேந்தன் நம் வேலவனுக்கு…..

பற்றறுத்த வாழ்வினை
பாடமாய் தந்த சிவன் மைந்தனுக்கு…

பத்து மலை ஆறுமுகனுக்கும்
தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கும்
கல்லுமலை கார்த்திகேயனுக்கும்..

நம் மலை நாடு முழுவதும் குடி கொண்டிருக்கும் வள்ளி மணாளனுக்கும்….

ஞானம் தந்த சிவன் மைந்தனுக்கும்…

மீண்டும் மீண்டும் சொல்லுங்கள் அரகரோகரா….

எழுதுவது :ராதை சுப்பையா, பெர்ச்சாம், ஈப்போ