நம் பாதை

எண்ணங்களும்,
நோக்கங்களும்
சரியாகவும்,
உண்மையாகவும்
அமைந்து விட்டால்
உறவுகளை நாம்
உருவாக்கத் தேவையில்லை…
அழகான உறவுகள்
தானாகவே
அமைந்து விடும்.

மக்களின் சிலர் அழகான இடத்தை தேடிச்செல்வார்கள்,

இன்னும் சிலர் இடத்தையே அழகாக்குவார்கள்!

சின்னஞ்சிறு விதை போல
நாம் இன்று செய்யும்
எல்லா முயற்சிகளும்
கண்டிப்பாக ஒருநாள்
விருட்சம் போல
நமக்கான வெற்றியை தேடி தரும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களை
நாம் மாற்றி அமைக்க முடியாது
ஆனால் நம்மைச் சுற்றி யார்
இருக்க வேண்டும் என்பதை
நாம் மாற்றி அமைக்கலாம்.

இது நம் பாதை நமக்கே உரித்தான பாதை
இந்த பாதையில் நம்முடன் சிலர் வருவார்கள்
ஆனால் நமக்காக யாரும் நடக்க முடியாது!

எழுதுவது ; விஜயலட்சுமி