மௌனமாக இருந்து பார்…|கவிநடை

மெளனமாக இருந்து பார்…
உறவுகளின் உன்னதம் புரியும்.

மெளனமாக இருந்து பார்..
யார் உன்னை நேசிக்கிறார்கள் என்று புரியும்.

மெளனமாக இருந்து பார் ..
உன்வாழ்வை நீ அறிவாய்.

மெளனமாக இருந்து பார்..
மனிதர்களின் குணம் புரியும்.

மெளனமாக இருந்து பார்..
அடுத்த மனிதர்களின்
உணர்வுகளையும் நீ புரிந்து கொள்வாய்.

மெளனமாக இருந்து பார்..
உன் வாழ்வின் யதார்த்தை உணர்வாய்..

மெளனமாக இருந்து பார்..
உன் மனஅழுத்தம்
மரணித்துக் போகும்.

மெளனமாக இருந்து பார்..
விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தெரிந்து விடும்.

மெளனமாக இருந்து பார்..
உன் இலக்குகளையும்
விலகல் எல்லாம் நீ அறிவாய்..

மெளனமாக இருந்து பார்..
உன் பிறப்பின்
அடையாளத்தையும்
இறப்பின் அருகாமையும் நீ உணர்வாய்..

மெளனமாக இருந்து பார்.. உன் மொத்த வாழ்க்கையும் நீ அறிவாய்.

எழுதுவது ; பஹ்ரியா பாயிஸ், இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *