மழலையால் பொங்கும் மகிழ்வு‌‌| கவிநடை

மழலையால் பொங்கும் மகிழ்வு‌‌

அன்னை என்ற அங்கீகாரத்தை அளித்தவளே!!

அவள் பிறந்த அந்நேரம் அற்புதம்!!

அனைத்து வலிகளும் அவளால் அகன்றன!!

அரும்பு போன்ற அழகியைக் கண்டதும்!!

அழகிய சிரிப்பில் அனைத்தையும் மறந்தேன்!!

அன்றே புதிதாய் அறிந்தேன் என்னை!!

அசட்டுச் சிரிப்பில் அர்த்தம் உணர்ந்தேன்!!

ஆண்டவன் அளித்த அன்பு மகள்!!

ஆதி சக்தியின் அவ்வடிவம் அவள்!!

அம்மா என்றாள் அவ்வளவு அழகு!!

அவளின் பாதம் அத்தனை மென்மை!!

அருமருந்தாகும் அவளின் அழகிய முகம்!!

அவளின் மழலையால் பொங்கும் மகிழ்வு!!

எழுதுவது : ந.ராஜேஸ்வரி
கரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *