❤காதல் மொழி❤

🌹மனதால் இரு உள்ளங்கள் இணையும் சங்கமமே….

🌹இரு உள்ளம் தேடி ஒரு இதயமாக மாறுமே….

🌹காதலிக்கும் போது மனதை பரிமாறிக்கொள்ளும் உன்னதமான உணர்வுவே….

🌹ஒருவர் மேல் வைக்கும் அளவுக்கு அதிகமான அன்பு பேரின்ப அன்பே….

🌹நமக்கு பிடித்தவர்களை நம் மனம் விட்டு பேசும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுமே….

🌹காதலின் அதிசயம் உண்மையே….

🌹காதலின் அழகு காத்திருப்பு….

🌹காதலில் காத்திருப்பது சுகமே….

🌹காதலுக்கு ஒருவரையொருவர் ஈர்க்கும் சக்தி இருக்கிறதே….

🌹நீ தேடிப் போகும் அன்பை விட உன்னை தேடி வரும் அன்பு உண்மையானதே….

🌹காதலிக்கும் போது அதிக சண்டை வரும். சண்டையில் யார் வந்து முதலில் பேசுவது காதலின் ரகசியம் அமைகிறதே….

🌹மனதிற்குப்பிடித்தவரிடம் மனம்விட்டுப் பேசினால் மனம் மகிழ்ச்சி அடையுமே….

🌹நேரத்திற்கு ஏற்றாற்போல் பேசும் அன்பைவிட அன்புக்காக நேரத்தை ஒதுக்கி பேசும் அன்பு உண்மையான அன்பே….

🌹உண்மையான அன்பு கெஞ்ச விடாது… யாருக்கும் விட்டுத் தராதது…

🌹நேசிக்கும் இதயம் ஒருநாள் மறக்காதது மாறாமல் இருப்பதே உண்மையான அன்பு…

🌹வாழ்வில் மாற்றம் இருக்கணும் தவிர காதலில் மாற்றம் இருக்கக்கூடாது….

🌹மௌனமாக இருப்பதால் மறந்துவிட்டேன். என்று நினைக்காதே உன் நினைவுகளில் உன்னுடன் உரையாடிக்கொண்டே தான் இருக்கிறேன்…

🌹உன்னில் என்னை கண்டேன்.என்னில் உன்னை கண்டேன். ஒருமுறை நேசித்து விட்டால் மறைக்க முடியாது ஞாபகங்கள் வந்து போகும்….

🌹காதலின் சுவையில் மெய்ப்பாடுகள் அறியலாமே….

🌹பேசுவதற்கு நேரம் இருந்தும் மனம்தான் இல்லை அப்படி பேசினால் தான் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமே….

🌹அதிக அன்பின் வெளிப்பாடு கோபமே அன்பின் உச்சகட்டம் சண்டையிட்டு சமாதானம் ஆவது தான்….

🌹காதலின் அருமை இருக்கும் போது தெரியாத விட்டுச் செல்லும்போதுதான் காதலைத்தொலைத்து விட்டோம் என்று….

🌹உன்னுடன் உனக்குள் தொலையும் காலம் எப்ப வருமென்று நீ விட்டுச் சென்ற பாதையில் விழிகளைப் பார்க்க வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் இதயமே….

மா.நந்தினி ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.