கடலோரக் கதைகள்
நூல் வெளியீட்டு விழா !

கடலோரக் கதைகள்
நூல் வெளியீட்டு விழா 19.12.2021 ஞாயிறு, மாலை 3 மணிக்கு நாகர்கோவில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க அரங்கில் வைத்து நடைபெற்றது.

விழாவுக்கு எழுத்தாளர். அருள் ஸ்நேகம் தலைமை வகித்தார்.
கவிஞர். ஜூடி சுந்தர் வரவேற்புரையாற்றினார்.
இரையுமன் சாகர் தொகுத்திருக்கும் ‘கடலோரக் கதைகள்’ சிறுகதை தொகுப்பு நூலை சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மலர்வதி அவர்கள் வெளியிட்டுவைத்தார்., ஊடகவியலாளர் ஜவஹர். ஜி நூலை பெற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் தமிழ் செம்மல் விருதுபெற்ற எழுத்தாளர் குமரி ஆதவன் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார்.
எழுத்தாளர் பெருமா. செல்வ. இராசேசு , மற்றும் எழுத்தாளர் ஆன்றனி டெலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக நூல் தொகுப்பாசிரியர் இரையுமன் சாகர்
ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வை கடற்கரை இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.