உயிர்க்குடுவை ஊசலாடுகிறது

மலர்களை போல
மென்மையானவர்களே!
மனதை திடமாக்குக்குங்கள்…
வெற்றி..
உனதாக்குங்கள்..!

தூக்கு கயிரை
கயவர்களின் கழுத்தில்..
மாட்டுங்கள்!

துணிந்த மனதை
முகமூடியாக
மாட்டிங்கள்..!

எது வந்தாலும்
அஞ்சோம்!
எமனை கண்டாலும்
துஞ்சோம்..!
என்றே வாழ பழகு
இனிதாகும் உலகு!

தப்பை தட்டிக்கேளூ
தப்பே நடக்காது
நீ நினைத்தால்….!

மனதில் வேண்டும்
உறுதி!
உன் நலனை
கருதி!

வீரத்தை மனதில்
விதைத்திடு!
பயத்தை தூரத்தில்
புதைத்திடு

எழுதுவது : ர.ஜெயபாலன்