தாரக மந்திரம் | கவிநடை

பிறரை நம்பி வாழ்வதை விட உன்னை நம்பி வாழ்ந்து பார்; தன்னம்பிக்கை மனதில் துளிர் விட்டு எழும்…

🌟பாதை தெளிவாக இருந்தால் உன் பயணம் தெளிவாக இருக்கும்…

🌟உன்னை தேவையில்லை என்று நினைக்கும் உறவுகளிடம் இருந்து விலகி இரு…

🌟உன்னை தேடும் உறவுடன் உண்மையாக பழகு…

🌟நீ தேடும் உறவை விட உன்னை தேடும் உறவு உன்னை விட்டு செல்லாது…

🌟பணம் இன்று வரும் நாளை போகும்;
வாழ்க்கையில் நல்ல பாதையில் செல்லும் மனிதர்களை வழி நல்ல நடத்துவது குணமே…

🌟வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைய முயற்சியும்;பயிற்சியும்; தன்னம்பிக்கை தாரக மந்திரம் மனதில் உறுதிக்கொள்…

🌟வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பார் பிறரை வாழ வைத்துப்பார்…

🌟உன்னிடம் பேச விருப்பம் இல்லாதவர்களிடம் விலகியே இரு…

🌟தகுதியற்ற மனிதனின் கையில் கூழாங்கல்லாய் இருப்பதை விட
தகுதியான மனிதனின் கையில் வைரக்கல் ஒளிரும்
வைரக் கல்லை இருப்பது மேல்…

🌟பிறரிடம் உதவி கேட்டு உன்னை பிறர் அலட்சியப்படுத்தும் போது கவலைப்படாதே…

🌟உனக்காக உதவி செய்வதற்கு இறைவன் இருக்கிறார்…

🌟உன் மேல் நம்பிக்கையிருந்தால் பிறர் உதவி
தேவையில்லை…

🌟பிறரின் கையை நம்பி வாழ்வதை விட உன் கையை நம்பி வாழ்ந்து பார்…

வாழ்க்கையின் தன்னம்பிக்கையுடன் இருந்ததால் தடைகளைத் தகர்த்து முன்னேறி விடலாம்…

வாழ்க்கையில் பல தோல்விகள் அடையும்போது அனுபவங்கள் கிடைக்கும்…

வெற்றிகள் எளிதாகக் கிடைப்பது அல்ல…

வாழ்க்கையில் போராடினால் தான் வெற்றி கிடைக்கும் முடியும் வரை போராடு…

🌟வாழ்க்கையில்
நீ எண்ண கூடிய எண்ணத்தை உயர்ந்த லட்சியமாக நினை அதுவே உன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்…

நீ கடந்து வந்த பாதையில் ஒவ்வொரு அனுபவமும் வெற்றியடைவதற்கு கற்றுக்கொடுத்த பாடம்…

🌟வாழ்க்கையில் வாழும் நிமிடம் கூட நிரந்தரம் இல்லாத போது நாம் வாழக்கூடிய வாழ்க்கை நிரந்தரமானது அல்ல…

🌟வாழ்க்கையில் என்றும் நிரந்தரமானது மாற்றம் ஒன்றே மாறாதது…

🌟வாழ்வது ஒரு முறை தான் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழலாம்…

🌟பிறரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கலாம்…

எழுதுவது ; மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *