அழகிய பெண்ணே!

அழகான பெண்ணே
உன்னைக் கண்டு அதிசயித்து நிற்கிறேன் நான்!

நீ எந்த நாட்டு இளவரசியோ!

உன்னைக் கண்டு நாட்டு மக்களே அதிசயிக்கிறார்களே!

உன் ஒளியால் கவரப்பட்டு மின்மினி பூச்சிகள் அருகே வந்து வட்டமிடுகின்றனவே!

சிரிக்கும் சத்தத்தில்
முத்துகள் சிதறுகிறதே!

பிரம்மனின் அபூர்வ படைப்பே!

பனி மழையில் நனைய வந்தாயோ!

அழகான இயற்கையை
அள்ளிக் கொண்டு செல்ல வந்தாயோ!

பூமித் தாயின் கரங்களில் தவழ வந்தாயோ!

உன் அழகைப் பார்த்து சூரிய தேவன் கண்கள் இவ்வளவு அகலமாகிறதே !

பெண்ணுக்கு பெண்ணே
பொறாமைப்படும் அழகியே!

நிலவு மகளும்
உன்னைக் கண்டு
நாணுகிறாளே!

பொல்லாத போக்கிரி நட்சத்திரங்கள் உன்னை பார்த்து தான் கண்களை சிமிட்டுகிறதோ!

ரம்பா ஊர்வசி மேனகையும்
அதிசயித்து நிற்கின்றனரே!

நீ எந்த லோகத்து அழகியோ!

தேவர்களும் புடைச் சூழ வருகிறார்கள்
உன்னைக் காணத் தானோ அழகிய பெண்ணே!

*விஜயலட்சுமி*