மனிதனும் தெய்வமாகலாம்…

தெய்வம் நாம்
என்றொரு
உள்ளுணர்வு
ஒரு சிறு துளி
நெருப்புணர்வாய்
உணரும் தருணம்…….

மன்னித்தல்
இயல்பாக
வரும்…..

சகித்தல்
சரளமாய்
வழியும்…..

கண்கள்வழியே
கருணையும்,
உதடுகள் பிரியா
புன்னகையும்
அலையென
எழும்…..

யாவருள்ளும்
‘நாமாய்’
நிறைய….
வலியும்,
பசியும்
தீர்க்கும்
எண்ணம்
சடுதியில்
செயலுக்கு
வரும்…….

பரிணாம வளர்ச்சியில்
படைப்புசக்தி
செய்த
சிற்சில தவறுகளை
நேர் செய்வதால்
மனித தெய்வமாய்
மாற்றம்
எழும்….

வாருங்கள்
யாவரும்
தெய்வமாகலாம்,
தெய்வம்
ஆனபின்…..
தெய்வமாகவே
இருப்பது
எவ்வளவு
கடினமென்பதை
புரிந்து
கொள்ளலாம்…

எழுதுவது : தர்ஷிணிமாயா