உனக்கு நீயே துணை| கவிநடை

அன்பின் வெளிப்பாடு நல்ல புரிதலே!!

உன்னை நேசிக்கும் பிரியம் கொண்டு மனம் விரும்பி ஏற்கும்!!

உன்னை புரியாது மனம் வெறுக்கும்!!

பிறரை நம்பி வாழ்வதைவிட உன்னை நம்பி வாழ்ந்து வாழு!!

உனக்குள் மறைந்திருக்கும்!!

இலட்சியக்கனவை தேடிப்போராடு!!

உன் பயம் தான் உன் பலவீனம்!!

உன் துணிவு தான் வாழ்க்கையின் பலம்!!

வாழ்வில் நீ துயரத்தில் தூரத்தில் வை!!

வெற்றியை இலக்கு வை!!

இலட்சியத்தை மனதில் வை!!

வாழ்க்கையே வெறுப்பாக வாழாதே!!

வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ பழகிக் கொள் !!

ஆயிரம் துணைகள் இருந்தாலும் உனக்கு நீ தான் துணை!!

வாழ்க்கையில் எது வந்தாலும் கடந்துவிடலாம் மன தைரியம் இருந்தால் எதையும் கடந்து வெற்றி பெற நம்மால் முடியும்!!

நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதே வெற்றியின் தாரக மந்திரம்!!

வெற்றி பெறுவது எளிதல்ல வெற்றியை போராடி வெல்வதில் தான் வெற்றி இருக்கிறது!!

இதுவும் கடந்து போகும் என்பதை விட எதுவும் கடந்து போகும் என்பதை உண்மை!!

வாழ்க்கையில் நடந்து போனதை நினைக்காதே இனி நடக்க இருப்பதை நினைத்து வாழ்ந்துபார் நல்லதே நடக்கும்!!

எழுதுவது: மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)சேலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *