தேடித்தான் பார்க்கிறேன்..

தேடித்தான் பார்க்கிறேன்
விட்டுப்போன
மகிழ்ச்சியை!

தேடித்தான் பார்க்கிறேன்
கள்ளங்கபடமில்லா
மனிதர்களை!

தேடித்தான் பார்க்கிறேன்
இனிமையான
இயற்கையை!

தேடித்தான் பார்க்கிறேன்
நஞ்சில்லா உணவை!

தேடித்தான் பார்க்கிறேன்
கடந்தகால நினைவுகளை!

தேடித்தான் பார்க்கிறேன்
செலவில்லாமல்
நாம் கற்றகல்வியை…!

தேடித்தான் பார்க்கிறேன்
மாசில்லா காற்றை…!

எழுதுவது ரா.ஜெயபாலன்