இந்திய சிம்பாவே தொடர்| இந்திய அணி வென்றது

இந்தியா சிம்பாம்பே அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஹராரேயில் நேற்று நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது 50ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்று இந்தத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.

290 என்ற ஓட்ட எண்ணிக்கையை பெற்றால் வெற்றி என சிம்பாம்பே அணி எதிர்த்து களமிறங்கியது.

ஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத நிலையில் அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்ந்தன. 5 வது வீரராக களமிறங்கிய சிக்கர் ராசா 88 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்து அணிக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தார். இருப்பினும் 275 ஓட்டங்கள் பெற்று வெற்றிப் பெற 15 ஓட்டங்கள் பெறப்பட வேண்டிய நிலையில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்து சிம்பாம்பே அணி தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 3/0 என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா அணி கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *