T20 உலகக்கிண்ணம் | இன்றைய போட்டிகளில் இலங்கையும் இந்தியாவும் வெற்றி

T20 உலகக்கிண்ணப்போட்டியின் முதற் போட்டியில் இலங்கையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றியைப்பதிவு செய்துள்ளன

Hobart இல் நடைபெற்ற இன்றைய முதற் போட்டியில் இலங்கை அயர்லாந்து அணியை சந்தித்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப்பெற்றது.

தொடரந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக 68 ஓட்டங்களை ஆட்டமிழக்காது குவித்த இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் அறிவிக்கப்பட்டார்.

அதே போல மெல்போனில் நடைபெற்ற இன்னுமொரு போட்டியில் ,இந்திய அணி ,பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டது.

கடைசி ஓவர்கள் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்த போட்டியாகவும் இது அமைந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இருபதாவது ஒவரின் கடைசிப்பந்தில் வெற்றி இலக்கை அடைந்து போட்டியில் வெற்றிபெற்றது.

ஆட்ட நாயகனாக இந்திய அணியில் ஆட்டமிழக்காது 53 பந்துகளில் 82 ஓட்டங்களைக் குவித்த விராட்கோலி அறிவிக்கப்பட்டார்.

நாளைய போட்டியில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்து அணியையும் தென்னாபிரிக்க அணி சிம்பாவே அணியையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *