இளங்காலை வானமகள்

இளங்காலை நேரத்தில்
வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள்.

ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்

மறுபுறம் மேகக் கூட்டத்தில் ஏற்பட்ட வண்ணங்களும்

ஆஹா!
என்ன ஒரு ரம்மியமான காட்சி.

மேகக் கூட்டங்கள் பூமியில் தான் விலங்கினங்களா வானிலும் பல வண்ணங்களில்
பலப்பல விலங்குகள் பாருங்கள் என்று பலவிதமான மேக உருவங்கள்.!

மொத்தத்தில் இளங்காலையில்
வான மகளின் களியாட்டம் என்னவென்று சொல்வது!

எழுதுவது :விஜயலட்சுமி