தாலாட்டும் தமிழ்

அன்னைத் தமிழே தாலாட்டும்–

ஆயுள்வரை நம்மை சீராட்டும் !இன்பத்தைத் தந்திடும் மொழியிது..

ஈடில்லா சுந்தர தேமதுரமது !

எம்மதமும் சாராத பொதுமொழி ஏற்றிடுவார் எந்நாட்டு மக்களும் !


இலக்கியம் பறைசாற்றும் பண்பினை இதிகாசம் இயம்பிடும் இலக்கணத்தை !

கரும்பினிய மொழியால் இனித்திடும் இரும்பான இதயமும் இசைத்தமிழால் !

இதயங்களை இணைக்கும் இனியதமிழ் உள்ளத்திற்கு சுகம்தரும் தெள்ளுத்தமிழ் !

காப்பியங்கள் காவியங்கள் கனியமுது கலையும் கலாச்சாரமும் தேனமுது !

பாட்டிசைத்த புலவர்கள் பல்லாயிரம் பாக்களை படித்தவர்கள் பலகோடி !

நன்பாக்கள் வெளிக்கொணர்ந்த நற்றமிழ் வெண்பாக்கள் வெளிவந்த தூயதமிழ் !

இதயங்களை குளிரவைக்கும் இசைத்தமிழ் வாழ்வின் நெறிகளை வகுத்தத்தமிழ் !

புவியெங்கும் புகழுடன் வாழ்ந்திடும் கவிகளை உருவாக்கிய உற்றத்தமிழ் !

குறள்தந்த வள்ளுவனின் ஈரடிகளால் உலகத்தை ஈர்த்திட்ட உயர்தமிழ் !

தமிழன்னை மடிதனில் தலைசாய்த்துதரணியில் வாழ்வதே பெருமையன்றோ !

எழுதுவது : கரவையூர் தயா.