“பாகிஸ்தானுடனான போர் நிறுத்தக்காலம் முடிந்தது,” என்றார்கள் பாகிஸ்தான் தலிபான்கள்.

நவம்பர் 09 ம் திகதியன்று அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு – பாகிஸ்தான் தலிபான் அமைப்பு ஆகியவைக்கு இடையிலான போர் நிறுத்தமும், நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் நிறுத்தப்பட்டு விட்டதாக தஹ்ரீக் ஏ தலிபான் அறிவித்திருக்கிறது. பாகிஸ்தானிய தலிபான்களிடமிருந்து வெளியாகியிருக்கும் அந்த அறிவிப்புக்குப் பதிலாக பாகிஸ்தான் அரசிடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தான் தலிபான்களால் நடுவர்களாக இருந்தே இப்பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. அவையின் முதல் கட்டமாகக் கைது செய்து சிறைவைக்கப்பட்டிருக்கும் 102 பாகிஸ்தான் தலிபான்களை ஆப்கானிஸ்தானில் விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்க நிறைவேற்றப்படவில்லை. பாகிஸ்தான் அரச இராணுவம் போர் நிறுத்தத்தை மதிக்காமல் பாகிஸ்தான் தலிபான்களைத் தாக்கியது, போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாள்ஸ் ஜெ. போமன்