செயற்கைக்கோள்

செயற்கையாய் விண்ணில் சென்று இயற்கையை படம் பிடித்தாய் !

பூமியில் பதித்த தடம் போதுமென்று நிலவில் தடம் பதித்து சாதிக்க செய்தாய்!

செவ்வாயில் புதிய உலகை படைக்க அழைத்துச் சென்றாய்!

விடியும் என நம்பிய விண்ணை , தொட முடியும் என அழைத்துச் சென்றாய்!

விண்வெளி பயணத்தை வான்வழியே கூட்டிச் சென்ற இயந்திர தேவதையே !!

விண்ணில் நடக்கும் நிகழ்வை மண்ணிலிருந்து அறிய, மனிதனால் உருவாக்கிய ஒளி விளக்கே நீ !!!

எழுதுவது
சீ. அல்ஸொய்மா
1-முதுநிலை கணிதம்
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி