தேன் சிந்தும் வானம்

தேன் சிந்தும் வானம்
சிலிர்க்கிறதே உன் நாணம்!

மனசெல்லாம் உன் நினைப்பு
நீயே அன்பின்
பிணைப்பு!

என் இதயவானின் நிலா
எப்போதும் வ௫கிறது உலா!

உன் கண் பாடுகிறது கவி
தாங்குமா இந்த புவி!

மனம் தேடுகிறது உன்னை
மங்கை சாடுகிறாள்
என்னை!

வாசமுள்ள மல்லி
மலர்ந்து விட்டது சொல்லி!

நீ வ௫வாயோ துள்ளி
எங்கே என் கள்ளி!

மாதமோ ஆடி
மனசோ உனை நாடி!

கண்ணால் தேடி
கவிதையால் கூடி!

காதல் கானம் பாடி
கண்ணே நீ வாடி!

நீயே அன்பின் முத்திரை
உன்னால் வ௫வதில்லை நித்திரை!

மனதில் எதோ பாரம்
என்னை விட்டு செல்லாதே தூரம்!

காதலின் சொர்க்கம் நீ
அன்பின் வர்க்கம் நீ

அழகின் விடியலே
இரவின் மடியிலே!

காத்தி௫க்கிறது மனம்
ஏங்குகிறது தினம்!

எழுதுவது : ர.ஜெயபாலன் ,எம்,ஏ.பி்எட்,
வெள்ளகோவில்,