பெண்ணின் மனம்

பெண்மை
அழகென
யாவரும்
அறிவார்…!!!

ஆண்மை
அழகென
அவனை
நேசிக்கும்
பெண்
மட்டுமே
அறிவாள்…!!!

ஓர்
ஆண் மகன்
தாய்மையோடு
கலந்த
தந்தை
உள்ளமும்
குழந்தை
குணமும்
தோழமையோடு
சேர்ந்து…!!

ஓர்
பெண்ணிற்கு
துணையாக
அமைந்து விட்டால்
வாழ்வில் வரம்
ஏதும் தேவை
இல்லையே…!!!

வாழ்நாள்
முழுதும்
ஓர் மழலை
போல்
அவன்
கரம் பற்றி
நடந்திட
வாழ்வின்
பயணங்கள்
இனிதாக
இருக்குமே
எந்நாளும்…!!!

என்னை தூங்க வைக்க
நீ முயற்சித்தாலும்..

தாலாட்டாக என் குரல்
தட்டிக் கொடுக்க..

என் விரல்கள்
தலையணையாக,
என் மடி போர்வையாக, உன் தலைமுடியை
கோதிக் கொண்டு
சுகமான அரவணைப்பு,

எல்லாம் இருந்தும்
தூக்கம் மட்டும்
என்னுடன் கண்ணாமூச்சி
விளையாடிக்கொண்டு இருக்கிறது!

ஏன் என்று சொல்லடா என் அன்பான கணவனே!
என்று பரஸ்பரம் வாழ்ந்தால்
சுகம் கோடியே!

எழுதுவது : விஜயலக்ஷ்மி