லண்டனில் சிதம்பரா கணித விழா நாளை|ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெறும் சிதம்பரா கணிதவிழா-2024,  இந்தவருடம் 13 வது வருடமாக,  நாளை ஜூலைமாதம் 13 ம் திகதி நடைபெற ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.

இந்தவருடமும் ஐக்கிய இராச்சிய  நாடுதழுவிய ரீதியில் தமிழ் மாணவர்களிடையே  நடைபெற்ற   சவாலான கணித பரீட்சையில் தோற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் அரங்க நிகழ்ச்சியாக, இது இடம்பெறவுள்ளது.
முழுநாள் நிகழ்ச்சியாக , குறொய்டன், Fairfield அரங்கில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி,  ஐக்கிய இராச்சியத்தின்  பலபாகங்களிலும் இருந்துவரும் மக்கள் ஒன்றுகூடும் கணித அரங்கமாக இது இருக்கும்.

இந்தவருடமும் தாயகத்திலிருந்து ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் வெற்றிபெற்ற மாணவர்களை,  அழைத்துவந்து, கணிதவிழா அரங்கில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

மாணவர்கள் பற்றிய விபரங்கள் இங்கே இணைப்பில்


நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு பற்றிக் டிரஞ்சன் அவர்கள் தனது பாரியார் சகிதம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கணிதவிழா அரங்கில் கௌரவிக்கப்படும் மாணவர்கள் , தொடர்ந்து இங்கிலாந்தில் கல்விச்சுற்றுலாக்கும் அழைத்துச்செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்கள் கீழே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *