350 கைதிகள் நாளை விடுதலை…!

பொது மன்னிப்பின் அடிப்படையில் நாளைய தினம் 350 சிறை கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சிறு குற்றங்கள் செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் கைதிகள் தினமாகும் ,இதனை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கைதிகளுடன் பார்த்து பேச வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *