அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது பெயரும் புகைப்படமும் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அத்தனகல்ல பிரதேச சபைத் தேர்தலில், நாற்காலி சின்னத்தின் கீழ் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சில வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்களான லசந்த அழகியண்ண மற்றும் சரண குணவர்தன உட்பட, சந்திரிகாவின் புகைப்படத்துடன் துண்டுப் பிரசுரங்களை வீடுகளில் விநியோகித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


தனது அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதை கண்டித்த சந்திரிகா, இது தேர்தல் சட்ட மீறலாக இருப்பதாகவும், தனது ஆதரவைப் போல காட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தினார்.

மேலும், இனிமேலும் தனது புகைப்படம் விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக் கூடாது என்று வேட்பாளர்களுக்கு அறிவிக்கக் கோரியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *