2025 ஆம் ஆண்டுக்கான ஏலம்..!

2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படும் போட்டியாக ஐ.பி.எல் போட்டிகள் திகழ்கிறது. இந்நிலையில் ஐ.பி.எல. போட்டிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கிடையில் காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பி.எல் உரிமையாளர்கள் மெகா ஏலம் நடைப்பெற கூடாது என தெரிவித்துள்ள நிலையில் இந்த வருட இறுதியில் ஐ.பி.எல் மெகா ஏலம் இடம் பெறவுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே வேளை முன்னதாக 5 அல்லது 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே தோனி சென்னை அணிக்கு விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு அணி 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *