ரஷ்யாவிற்குள் நுளைந்து தாக்குதல்..!

உக்ரைன் ஆனது ரஷ்யாவினுள் நுளைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.இதன் காரணமாக அங்கு அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கூர்க்ஸ் பகுதியில் உக்ரைன் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக 76 ஆயிரம் பேர் பாதுகாப்பு நிமித்தமாக அப்பகுதியை விட்டு வெளியேற்றியுள்ளனர்.மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு நிமித்தமாக ரஷ்ய வீரர்களை ஈடுப்படுத்தியுள்ளனர்.

இதே வேளை ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலை யத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் கரிய புகைமண்டலம் ஏற்பட்டுள்ளது.மேலும் அணு வீச்சு தாக்கும் அபாயமும் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இவ்வாறான நடவடிக்கைகளை ரஷ்யா தவிர்க்க வேண்டும் என உக்ரைன் தெரிவித்துள்ள போதும் ,இந்த சம்பவத்திற்கும் உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக உக்ரைன் தெரிவித்த நிலையில் ரஷ்யாவானது உக்ரைன் மீது தாக்குதலை நடத்த துவங்கியது. இந்நிலையில் பல நாடுகள் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய போதும். அதனை கேட்ட பாடில்லை.

உக்ரைன் ற்கு ஆதரவாக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை செய்துவருகின்றன .இதன் காரணமாக உக்ரைனின் பலம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *