அதிக மழையால் பலர் பாதிப்பு..!

இந்தோனேசியாவின் டெர்னேட் தீவில் அதிக மழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ருவா என்ற கிராமத்தில் அதிக மழை பெய்ததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது.இங்கு பிரதான சாலைகள் பாதிப்படைந்துள்ளதுடன் தரைவழி தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை பல வீடுகள் கட்டிடங்கள் சேற்றில் புதைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் மக்கள் மலை பாங்கான பிரதேசங்களில் அதிகளவு வாழ்கின்றனர். இதன் காரணமாக இயற்கை அனர்த்தங்களின் போது பெரும்பாலும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *