எதிரிகளை எதிர்த்து போராட தயாராக இருக்க வேண்டும்-ஈரான்..!

தேவைப்பட்டால மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என் ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி கருத்து வெளியிட்டார்.

“கடந்த ஆண்டு ஒக்டோபர் 07 ம் திகதி இஸ்ரேலில நடத்தப்பட்ட தாக்குதல் பாலஸ்தீன மக்களின் நியாயமான நடவடிக்கை ஆகும்,கடந்த செவ்வாய் கிழமை ஈரான் படைகள் நேர்த்தியான தாக்குதலை நடத்தியுள்ளன.இந்த தாக்குதல பாலஸ்தீன மக்களின் நியாயமான அடிப்படையில் நடத்தப்பட்டது.தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதலை நடத்த தயாராகவுள்ளோம்.

ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை ,ஈரானில் இருந்து காஸா வரை நாம் அனைவரும் எதிரிகளை எதிர்த்து போரிட தயாராக இருக்க வேண்டும்.லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டுவரும் துணிச்சலான போராளிகளே ,விசுவாசமும் பொருமையும் கொண்ட மக்களே ,இந்த தியாகங்களும் ,சிந்தப்பட்ட இரத்தமும் உங்கள் உறுதியை அசைத்து விடாமல் இருக்க வேண்டும்”

என தெரிவித்தார்.இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தெஹ்ரானிலுள்ள மொசல்லா பள்ளிவாசலில் நடைப்பெற்ற தொழுகையின் பின் உரையாற்றியிருந்தார். அதன் போதே மேற்கண்டவாரு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *