பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு…!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய அமெரிக்காவை சேர்ந்த டொரன் எசமெக்லு, ஜேம்ஸ் ரொபின்சன்,சைமன் ஜோன்ஷன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்,பின்னடவை சந்திக்கும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள்.இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான காரணங்கள் போன்ற இன்னோரான விடயங்கள் தொடர்பாக இவர்கள் ஆராய்ச்சி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவம்,இயற்பியல்,வேதியியல்,இலக்கியம்,பொருளாதாரம்,அமைதி போன்ற துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு வருடந்தோரும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *